விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்தார். மாநில நெசவாளர் அணிச்செயலாளரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம்தென்னரசு முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பங்கேற்று பேசுகையில், தற்போதைய ஆட்சியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படு்த்தி வரும் பால், மின்சார கட்டணம் ஆகியவைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வினால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சீனி, மதுபானங்களின் விலையையும் உயர்த்தி பொதுமக்களின் எதிர்ப்புக்கு இந்த அரசு காரணமாகி வருகிறது. அதோடு, தற்போது சரியான தலைமை இல்லாத நிலையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.