சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் ஆண் சடலம்: கொலையா என போலீஸார் விசாரணை

விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். மேலும், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து  வீசியிருக்காலமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:21 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். மேலும், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து  வீசியிருக்காலமோ என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே கோட்டைப்பட்டி வருவாய் கிராம உதவியாளராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் வெள்ளிக்கிழமை இரவு ரயில்வே பீடர் சாலையில் 11.30 மணிக்கு நடந்து சென்றாராம். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கும் போது கழிவு நீர் வாய்க்காலில் ஆண் சடலம் காயத்துடன் தலைகுப்புற கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்ததில் இதே பகுதியைச் சேர்ந்த கீரைகுமார் என்பது தெரியவந்தது. பின்னர் யாரோ மர்ம நபர்கள் முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை செய்து கழிவு நீர் வாய்க்காலில் வீசிவிட்டு சென்றிருக்காலமோ என்கிற ரீதியில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.