விருதுநகர் அருகே கோட்டைப்பட்டி வருவாய் கிராம உதவியாளராக இருப்பவர் சுப்பிரமணி. இவர் வெள்ளிக்கிழமை இரவு ரயில்வே பீடர் சாலையில் 11.30 மணிக்கு நடந்து சென்றாராம். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கும் போது கழிவு நீர் வாய்க்காலில் ஆண் சடலம் காயத்துடன் தலைகுப்புற கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனே அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.