விருதுநகர் அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த சிவரஞ்சனி-ராமசாமி தம்பதியரின் மகள் எல்லம்மாள்(10). இவர் கடந்த திங்கள்கிழமை இரவு தாயார் வெளியில் சென்றிருந்த சமயத்தில் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது, திடீரென அடுப்பில் இருந்த மண்ணெண்ணெய் சிதறி எல்லம்மாள் உடல் மேல் பட்டு திடீரென தீப்பிடித்தது.பின்னர் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் ஓடிவந்து சிறுமியை படுகாயத்துடன் மீட்டனர். அதையடுத்து, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் பலனின்றி காலையில் உயிரிழந்தார்.