மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 6 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பார்வையற்ற தேர்வர்கள் 18 பேருக்கு 3 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அறைக்கு 6 பேர் வீதமும், அவர் சொல்வதை எழுதுகிறவர்கள் 18 பேரும் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை 10 மணிக்கு தொடங்கி, 2 மணி வரையில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் அறைக்கு எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளப்பாதை, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.