சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்த  இக்கூட்டத்தில் ஆட்சியர் தலைமை வகித்து பேசியதாவது: சிறப்பு ஆசிரியருக்கான தகுதித் தேர்வு சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:19 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துதல் தொடர்பாக அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்த  இக்கூட்டத்தில் ஆட்சியர் தலைமை வகித்து பேசியதாவது: சிறப்பு ஆசிரியருக்கான தகுதித் தேர்வு சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்தில் 21-ம் தேதி(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இத்தேர்வில், மாற்றுத்திறனாளிகள் 119 பேரும், பார்வையற்றோர் 18 பேரும் என மொத்தம் 137 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 6 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பார்வையற்ற தேர்வர்கள் 18 பேருக்கு 3 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அறைக்கு 6 பேர் வீதமும், அவர் சொல்வதை எழுதுகிறவர்கள் 18 பேரும் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை 10 மணிக்கு தொடங்கி, 2 மணி வரையில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் அறைக்கு எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளப்பாதை, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், துணைக் காவல் கண்காணிப்பாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.