சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருச்சி-நெல்லை எக்ஸ்பிரஸ் விருதுநகர் ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காததால் 1.30 மணிநேரம் தாமதம்

விருதுநகர் ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறினால்  சிக்னல் கிடைக்காததால் திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:18 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் ரயில் நிலையத்தில் தொழில் நுட்பக் கோளாறினால்  சிக்னல் கிடைக்காததால் திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியினர்.

திருச்சி-நெல்லை சூப்பர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் விருதுநகர் ரயில் நிலையத்திற்கு காலையில் 10.30 மணிக்கு வந்து, 10.32-க்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல், திங்கள்கிழமையும் சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதையடுத்து, 10.32-க்கு புறுப்படும் போது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தொழில் நுட்ப கோளாறு போன்ற காரணத்தால் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதையடுத்து சிக்னலை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனிடையே ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பெண்கள் ஆகியோர் வெக்கையால் அவதிப்பட்டனர். அதோடு, கிழே இறங்கவும் முடியாத நிலையில் உள்ளேயே இருந்தனர். பின்னர் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு பின் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 1.30 மணிநேரம் தாமதமாக சரியாக 12.05 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சிக்னல் கிடைக்காத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.