சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருவிழா தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:58 am

எஸ். பாண்டியன்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில் ஆடி அமாவசை திருவிழாவை முன்னிட்டு மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்-சந்தனமகாலிங்கம் திருக்கோயிலில் உச்சக்கட்ட திருவிழாவான ஆடி அமாவசை திருவிழா 26,27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தரிசனம் பெற்றுச் செல்வார்கள். இதில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு-பேரையூர் சாலையில் உள்ள தாணிப்பாறை சாலை நுழைவு பகுதிகளிலிருந்து மலை அடிவாரப்பகுதி வரையில் 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 20 சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதேபோல், தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள மலையேற்ற பாதையில் செல்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் கருவியால் பக்தர்களை சோதனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்தே மலையேற்ற பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயிலுக்கு வரும் பாதை, தாணிப்பாறை வண்டிப்பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் நகைத் திருடர்கள் மற்றும் ஜேப்படி திருடர்கள் ஆகியோரை கண்காணிப்பதற்கு சீருடையில்லாத ஆண், பெண் காவலர்கள் ஈடுபட இருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்து வசதி: இக்கோயிலுக்கு எளிதாக சென்று வரும் வகையில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளி்ட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 24-ம் தேதி முதல் 27-ம்தேதி வரையில் இரவு, பகல் எந்த நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.