சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி 25-ம் தேதி தொடக்கம்

விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:57 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி வருகிற 25-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 30-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து விருதுநகர் சதுரங்க கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச  சதுரங்க நடுவருமான ஆனந்தராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க போட்டி நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில் 1 கிராண்ட் மாஸ்டர், 13 சர்வதேச மாஸ்டர்கள், 1 பிடே மாஸ்டர், 1 கேண்டிடேட் மாஸ்டர், தேசிய, மாநில அளவில் சாதனை செய்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.இப்போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.65 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், 4-வது பரிசு முதல் 35-வது பரிசு வரையில் ரொக்க பணமாகவும் அளிக்கப்படுகிறது.

இதில், பொதுப்பிரிவில் 8,10,12,15 வயது பிரிவில் முதன் மூன்று இடங்களை பெறுகிறவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்படும். இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதே வயது பிரிவில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட இருக்கிறது. இப்போட்டியை சதுரங்க கழகம் சார்பில் இணைய தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச சதுரங்க நடுவர் அனந்தராம் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.