சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் செய்த விற்பனையாளர்கள் 4 பேரை  தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் செய்த விற்பனையாளர்கள் 4 பேரை  தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் ஆய்வின் போது இருப்பு குறைவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பது தெரியவந்தது. எனவே முறைகேடுகள் செய்த நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.117928.50(ஒரு லட்சத்து, பதினேழு ஆயிரத்து, தொள்ளாயிரத்து இருபத்தெட்டு ரூபாய் மற்றும் ஐம்பது காசுகள்) வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், கடும் முறைகேடு செய்த பி.ராமச்சந்திரபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் நூர்சாகிபுரம், துலுக்கன்குளம், தாயில்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் செவல்பட்டி மற்றும் சாமிநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நடத்தும் ஈஞ்சார் ஆகிய நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டனர். அதன் அடிப்படையில் 4 விற்பனையாளர்களை தாற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.