அதன் அடிப்படையில் இப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் போலீஸார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதையடுத்து உடனே புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு, இது தொடர்பாக அரசகுடும்பன்பட்டியைச் சேர்ந்த ரெங்கசாமி(48), சூலக்கரை வ.ஊ.சி.நகர் ஸ்ரீதர்(30), எம்.ஜி.ஆர்.நகர் செந்திக்குமார்(40), கோவில்புலிகுத்தி காசி, சூலக்கரை தனியார் மில் பகுதியைச் சேர்ந்த கலா(38), சூலக்கரை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி, அதே பகுதியைச் சேர்ந்த கனகேஸ்வரி(44) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.