இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.இதில், நியாய விலைக்கடை பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் 31.12.2013 அன்றோடு முடிவடைந்ததால், 1.1.2014 முதல் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக விற்பனையாளர்களுக்கு வழங்குவது போல் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். நியாய விலைக் கடை பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நியாய விலைக்கடை பணியாளர்கள், சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.