அவ்வகையில் 2013-14 ஆண்டிற்கான இளைஞர் நலப்பணிகளுக்கான விருது இந்நிதியாண்டில் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெற இளைஞர்களாக இருந்தால் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதில், இளைஞர்கள் எவ்வித சுயநலமின்றி சமூக நலன் கருதி சேவைப்பணியாற்றி வருகிறவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கான வயது வரம்பு 13-லிருந்து 35 வயதிற்குள் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு முன்பு இந்த விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களாக இருக்கக் கூடாது. இதில், சிறந்த இளைஞராக தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் பதக்கம் ஆகியவை 25 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது.