சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(64). இவர் ஊருக்கு மேற்கு மாரியம்மன் கோயில் கண்மாய்க்கு சனிக்கிழமை மாலையில் துணிகளை துவைத்து குளிப்பதற்காக சென்றாராம். அப்போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாமி சிலை திருட்டு: விருதுநகர் அருகே உள்ளது பாவாலி கிராமம். இங்குள்ள குளக்கரையில் ஜமீன்தார் காலத்தில் வைக்கப்பட்ட சிலையை பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் குளக்கரை பிள்ளையார் சாமி சிலையை திருடிச் சென்றனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் குளக்கரையில் குளிப்பதற்காக வந்த பொதுமக்கள் பிள்ளையார் சிலை திடீரென காணாமல் போயிருந்தது கண்டு திடுக்கிட்டனர். உடனே இது தொடர்பாக கிராம மக்கள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இரவு நேரத்தில் குளக்கரையில் இருந்த பிள்ளையார் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.