சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் உதவி தொகையை அமைச்சர்கள் வழங்கினார்கள்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற போது தவறி உயிரிழந்த 5 மாணவிகளின் குடும்பத்தினரிடம் முதல்வர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று கண்மாய் குளத்தில் குளிக்கச் சென்ற போது தவறி உயிரிழந்த 5 மாணவிகளின் குடும்பத்தினரிடம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் உதவித் தொகைக்கான காசோலைகளை  அமைச்சர்கள் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு உதவித் தொகையும் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பங்கேற்று உயிரிழந்த 5 மாணவிகளின் பெற்றோர்களான பா.கோபால்ராஜ், எம்.ராமசாமி, எம்.முருகன்(இரு வாரிசுகள்), சி.சண்முகராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

இதேபோல், காளையார்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், சிவகாசியைச் சேர்ந்த அ.ரீனா ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளையும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விழுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்விக்கு கிராம உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.சுப்பிரமணியம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேலாயுதம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.