சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் மாவட்டத்தில் சுயநிதிப்பாட பிரிவு பிளஸ்2 மாணவ மாணவிகள் கவனத்திற்கு...

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாட பிரிவுகளில் பிளஸ்2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைகளின் படி விலையில்லா மடிக்கணினி வழங்கப்படமாட்டாது என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இந்த மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சுயநிதிப்பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பிளஸ்2  பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அரசு விதிமுறைப்படி விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படாது. எனவே அரசின் கொள்கை முடிவு என்பதாலும், பள்ளி நிர்வாகம் ஆகியவைகளுக்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் தலைமையாசிரியர்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்க வலியுறுத்தி மாணவிகள் பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இனிமேல் இதுபோன்று மறியலில் ஈடுபட்டாலோ, ஏதேனும் தவறுகள் அல்லது நிர்வாக பிரச்னைகள் ஏற்பட்டாலோ அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தான் பொறுபேற்க வேண்டும். அதேபோல், மறியலில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.