சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் எதிரே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் முதல்வரின் தனிப்பிரிவு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தூய சவேரியார் ஆலயம் பகுதியில் அரசு விதிமுறைகளுக்கு எதிராக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தூய சவேரியார் ஆலய கத்தோலிக்க கிறிஸ்துவர்கள், முதல்வரி்ன் தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் பாண்டியன் நகரில் செயல்பட்டு வந்த மதுபானக் கடையை பொதுமக்கள் இடையூராக இருப்பதாக கூறி அகற்றம் செய்துள்ளனர். அதேபோல், பெரியபேராலியில் உள்ள கடையும் அப்பகுதியில் உள்ளவர்களின் எதிர்ப்பினால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு கடைகளையும் சேர்த்து அனைத்து நவீன வசதியுடன் மல்லாங்கிணறு சாலையில் அமைக்கவுள்ளனர். இதன் எதிரே தூய சவேரியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அரசு விதிமுறையின் படி பள்ளி, கல்லூரி,  ஆயலங்கள் மற்றும் திருக்கோயில்கள் ஆகிய இடங்களில் இதுபோன்ற மதுபான கடைகள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

இதையும் மீறி ஆலயம் வளாகம் எதிரே இக்கடையை அமைத்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஆலயத்தில் திங்கள்கிழமை தொடங்கி, தொடர்ந்து வியாழக்கிழமை வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் திருப்பலி நிகழச்சி, ஜெப வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையத்திற்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் கிறிஸ்துவர்கள் மட்டும் அல்லாமல், பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் இக்கடை அமைக்கப்படும் வழியாகத்தான் வரவேண்டும்.

அதோடு, இக்குறிப்பிட்ட பகுதியில் விருதுநகர் ஆர்.சி.பள்ளி, எஸ்.எப்.எஸ் பள்ளி, நோபிள் பள்ளி, உள்ளிட்ட பெண்கள் கல்லூரிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடமாகும். இதுபோன்ற காரணங்களால் மது அருந்துகிறவர்களால் தொந்தரவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வழிபாட்டு தலத்திற்கு அருகில் அமைக்கப்பட இருக்கிற மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்து முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.