ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரயில் மோதி மூதாட்டி சாவு

திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

Updated On :21 டிசம்பர் 2014, 2:28 am

திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

திருவெறும்பூர் அருகேயுள்ள மேலகுமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மனைவி பொன்னம்மாள்(65). இவர் சனிக்கிழமை காலை அந்த பகுதியிலுள்ள எழில்நகருக்கு செல்வதற்காக அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடந்தார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருச்சி ரயில்வே ஜங்ஷன் 5-வது நடைமேடையிலுள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.