ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போலி பட்டா தயாரித்து மோசடி: 4 பேர் கைது

திருச்சியில் ஒருவரின் நிலத்தை போலி பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :17 டிசம்பர் 2014, 4:32 pm

திருச்சியில் ஒருவரின் நிலத்தை போலி பட்டா தயாரித்து மோசடியில் ஈடுபட்ட 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம்,வடக்கு வாசல் தெருவைச் சேர்ந்தவர் சேகர (53). அங்குள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நவல்பட்டு அருகேயுள்ள குமபக்குடி ஊராட்சி, வேலாயுதம்குடியில் 1.68 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ. 25 லட்சமாகும்.

இந்நிலையில் இவருடைய நிலத்தை மாத்தூரைச் சேர்ந்த சேகர், அதே பகுதி கைனாங்கரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி நாகராஜ் (34), மாத்தூர் ராசிபுரத்தைச் சேர்ந்த சேகர், சின்னசூரியூரைச் சேர்ந்த கணேசன் (63) ஆகிய 4 பேர் போலி பட்ட தயாரித்து அந்த நிலத்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நில உரிமையாளர் சேகர், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரியிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட நில அபுகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், அந்த நான்கு பேரும் சேகரின் நிலத்தை போலி பட்ட தயாரித்து விற்க முயன்றது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் மேற்கண்ட 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.