பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தனியார் பெண்கள் விடுதியில உணவு சாப்பிட்ட 72 பேருக்கு வாந்தி மயக்கம்

திருச்சி காஜாமலை அருகேயுள்ள தனியார் பெண்கள் விடுதியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 72 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:41 am

சி.சண்முகவேல்

திருச்சி காஜாமலை அருகேயுள்ள தனியார் பெண்கள் விடுதியில் புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 72 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கே.கே.நகர் அருகேயுள்ள காஜாமலை, கேசவ நகரில் மினர்வா பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில், ஈ.வெ.ரா கல்லூரி, பாரதிதாசன் பல்கலைகழகம், சட்டக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு இந்த விடுதியில் காலிப்பிளவர் கூட்டு, சாம்பார் சாதம் சாப்பிட்ட 72 பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வாந்தி மயக்கத்தில் இருந்த பெண்களை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜேந்திரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.