6 ரயில்களின் பயண நேரம் குறையும்:இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் பொதுமேலாளர் ரஸ்தோகி கூறுகையில், விருதுநகர்- நெல்லை, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இடையேயான மின்சார ரயில்பாதைக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் டிசம்பர் இறுதி வாரம் முதல் தென்பகுதியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படும். அதன்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்சி இன்டர்சிட்டி ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 6 ரயில்களும் முதல்கட்டமாக மின்மயமாகும். இதனால் சென்னைக்கு செல்லும் பயண நேரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறையும் என்றார் அவர்.