குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஒருவர் கைது

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி அர்ஜூனா ஆற்றுப்படுகை பகுதியில்  அனுமதியில்லாமல் மர்ம நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து காவல்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:38 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி திருட்டுத் தனமாக மணல் அள்ளியதாக ஒருவரை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி அர்ஜூனா ஆற்றுப்படுகை பகுதியில்  அனுமதியில்லாமல் மர்ம நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் புதன்கிழமை அதிகாலையில் திடீர் ரோந்து சென்றனர்.

அப்போது, கெங்கை அம்மன் திருக்கோயில் பின்புறம் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. அதை போலீஸார் தடுத்து  நிறுத்தியதும் உடனே இறங்கி ஓட முயற்சித்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின் லாரியை சோதனையிட்டதில் உள்ளே ஆற்றுமணல் இருந்தது. அதையடுத்து விசாரணை செய்ததில் நடுவப்பட்டியைச் சேர்நத போத்திராஜ்(37), மிளகாய்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கா.கல்லுண்டான்(30), இ.முத்திலிங்காபுரத்தைச் சேர்ந்த குட்டி என்பதும், லாரியின் உரிமையாளர் நடுவப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, போத்திராஜ் என்பவரை மட்டும் கைது செய்தனர். மேலும், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், மணலுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.