ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே 9 யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் : பயிர்கள் நாசம்

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமம் வனத்துறை எல்லையோரம் அமைந்துள்ளது.  அப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வந்து செல்கின்றன.  செவ்வாய்க்கிழமை இரவு

Updated On :10 டிசம்பர் 2014, 11:52 am

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 யானைகள் புகுந்து அட்டகாயம் செய்ததில் பயிர்கள் நாசமாயின.

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமம் வனத்துறை எல்லையோரம் அமைந்துள்ளது.  அப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வந்து செல்கின்றன.  செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சுமார் 9 யானைகள் அக்கிராமத்திற்கு வந்துள்ளது.  அங்கு தேவன் என்பவருடைய விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளன.  நிலத்தில் நெல், வாழை ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன.  சுமார் முக்கால் ஏக்கர் நெல்பயிர் முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளது.  மேலும் சில வாழை மரங்களையும், ஒரு தென்னை மரத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த வனத்துறை பணியாளர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று யானைகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அவரை அங்கிருந்து காட்டுக்குள் சென்றன.  திரும்ப யானைகள் வந்தால் அவற்றை விரட்ட பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர்.

பேர்ணாம்பட்டு சாரங்கல் வனப்பகுதியிலிருந்து அந்த யானைகள் வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.