சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

அருப்புக்கோட்டை அருகே அனுமதியின்றி கருந்திரிகளை தயாரித்த பட்டாசு ஆலைக்கு சீல்வைப்பு

அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிக்கட்டுகளை தயார் செய்த பட்டாசு ஆலைக்கு கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:37 am

எஸ். பாண்டியன்

அருப்புக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிக்கட்டுகளை தயார் செய்த பட்டாசு ஆலைக்கு கோட்டாட்சியர் பி.சுபாநந்தினி உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், அந்த ஆலையில் தயாரித்து வைத்திருந்த ரூ. 5லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையை விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 5 அறைகளில் சீனிவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இந்த ஆலையில் அனுமதியில்லாமல் கூடுதலாக கருந்திரிகளையும் தயாரித்து வருவதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி தலைமையில் வருவாய் அலுவலர்கள் மற்றும் பந்தல்குடி காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாலையில் பட்டாசு ஆலைக்கு திடீர் சோதனைக்குச் சென்றனர். அப்போது, தூரத்தில் காவல் துறையினரின் வாகனங்களை வருவதை அறிந்த தொழிலாளர்கள் உடனே அப்படியே கருந்திரிகளை போட்டு விட்டு   தப்பியோடினார்களாம். பின்னர் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ததில் ஒரு அறையில் கருந்திரி கட்டுக்கள் தயாரித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்து பின்னர் தீயணைப்பு துறையினர் அழித்தனர்.  

இது தொடர்பாக கோட்டாட்சியர் சுபாநந்தினி கூறியதாவது: சீனிவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு மட்டும் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், இங்கு சட்டவிரோதமாக இங்குள்ள ஒர் அறையில் கருந்திரிகளையும் தயார் செய்வதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். உடனே அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்ததோடு ஆலைக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து பந்தல்குடி காவல் நிலையத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் நாகலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.