இதில் மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படாத நிலையில் உள்ள 500 வங்கி கடன் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 125 வழக்குகள் வரையில் சமரசம் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.90 லட்சம் வரையில் வசூல் ஆனாது. இக்கடன்கள் பாண்டியன் கிராம வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கடன் சம்பந்தப்பட்ட வழக்காகும். இதேபோல், மோட்டார் வாகன விபத்துக்களில் 18 வழக்குகளில் சமரசம் செய்யப்பட்டு அதற்கான ரூ.37 லட்சம் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கும் வகையில் தீர்வு காணப்பட்டது.