சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 12 ஆயிரம் வழக்குகளில் சமரச தீர்வு: வழக்குகள் மூலம் ரூ.1.84 கோடி வசூல்

விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்  நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் வட்டார அளவிலான (மெகாலோக் அதாலத்) 12 ஆயிரம் வழக்குகள் வரையில் சமரசம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:36 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்  நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் வட்டார அளவிலான (மெகாலோக் அதாலத்) 12 ஆயிரம் வழக்குகள் வரையில் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டது. அதோடு, கடன் மற்றும் அபராத தொகையாக பல்வேறு வழக்குகள் மூலம் ரூ.1.84 கோடி வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த வட்டார அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  இந்த முகாமிற்கு நீதிபதி எம்.இ.பத்மா, ஜே.எம்.1ன் நீதிபதி எம்.ப்ரீதா, ஜே.எம்.2ன் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தனர். மக்கள் நீதிமன்ற சமரச குழு தலைவராக முன்னாள் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.டி.ஸ்டாலின் செல்வராஜ், உறுப்பினர்கள் வழக்குரைஞர் எம்.எஸ்.அசோக், சமூக ஆர்வலர் அழகுசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மக்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்படாத நிலையில் உள்ள 500 வங்கி கடன் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 125 வழக்குகள் வரையில் சமரசம் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.90 லட்சம் வரையில் வசூல் ஆனாது. இக்கடன்கள் பாண்டியன் கிராம வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளின் கடன் சம்பந்தப்பட்ட வழக்காகும். இதேபோல், மோட்டார் வாகன விபத்துக்களில் 18 வழக்குகளில் சமரசம் செய்யப்பட்டு அதற்கான  ரூ.37 லட்சம் நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கும் வகையில் தீர்வு காணப்பட்டது.

மேலும், ஜே.எம்.1 நீதிமன்றத்தின் குற்றவியல் வழக்குகளில் அபராத தொகையாக ரூ.1.80 லட்சமும், காசோலை மற்றும் ஜீவனாம்ச வழக்குகளில் ரூ.52 லட்சமும், ஜே.எம்.2 நீதிமன்ற வழக்குகளில் ரூ.4 லட்சமும் அபராதத் தொகையாக  வசூலிக்கப்பட்டது. எனவே இந்த 2 நீதிமன்றங்கள் மூலம் 12 ஆயிரம் வழக்குகள் வரையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் வட்டார சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் என்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.