தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து


பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கருப்பு சட்டை அணிந்து சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மூளிப்பட்டி அரண்மனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் எம்.எஸ்.முஹம்மது இப்ராஹூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.காதர்பாட்ஷா, மாவட்ட பொருளாளர் எஸ்.அப்துல்கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பி.எஸ்.ஹமீது, பெரியபள்ளிவாசல் ஜமாத் தலைவர் முஹம்மது எகியா, வழக்குரைஞர் தங்கராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மஸ்ஜித்தை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவும், உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தேனிவசந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வெ.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...