விருதுநகர் அருகே கருந்திரிகள் உராய்வினால் தீ விபத்து: பள்ளி மாணவன் சாவு
விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர்


விருதுநகர் அருகே கருந்திரிகளை தயாரித்த போது ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் இன்று காலையில் உயிரிழந்தான்.
விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல் கடந்த 30ம் தேதி மாலையில் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக தயாரித்த கருந்திரி கட்டுக்களை வீட்டின் ஓரப்பகுதியில் வைத்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் பாரதவிதமாக கருந்திரி கட்டுக்களில் உராய்வு ஏற்பட்டு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதில், அப்பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாக்கியலட்சுமி(35), இவர்களது 3-ம் வகுப்பு படிக்கும் மகன் யோகிராம்(8) ஆகியோர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், அவரது மகன் யோகிராம் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தான். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...