எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:34 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நரிக்குடி, ஆணைக்குளம் மற்றும் முக்குளம் ஆகிய 3 உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் விடுதி காப்பாளர், பகுதி நேர கணினி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதில், விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு மாதந்தோறும் ரூ.25 ஆயிரமும், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.5 ஆயிரமும், கணக்காளர் பணிக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதில், விடுதி காப்பாளர் பணிக்கு மட்டும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.

கல்வி தகுதி: விடுதி காப்பாளர்கள் பணிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன், ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதேபோல் கணினி ஆசிரியருக்கு கணினியில் இளங்கலை பட்டத்துடன் பி.ஜி.டி.சி.ஏ, டி.சி.ஏ முடித்தவராகவும், உடற்கல்வி ஆசிரியருக்கு இளங்கலை பட்டத்துடன் பி.பி.எட் அல்லது சி.பி.எட், கணக்காளர் பணிக்கு பி.காம் பட்டப்படிப்புடன் மற்றும் டாலி பயிற்சி முடித்திருக்க வேண்டும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் பெண் பணியாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பணியிடங்கள் தொடர்பாக திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் கல்வி இயக்கம், சுப்பையா நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், விருதுநகர் மாவட்டம், என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வருகிற 8-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தொலை பேசி எண்:04562-243218 அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.