எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு 225 பசுமை வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்

விருதுநகர் மாவட்டத்தில் 225 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 225 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில்,  சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் தமிழகத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மாவட்டத்தில் ஊரக பகுதிகளிலோ, நகராட்சி பகுதிகளிலோ வறுமையில் வாழ்ந்து வருகிற, சொந்த நிலம் வைத்திருக்கிற கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் பசுமை வீடு அமைப்பதற்கு ரூ.2.60 லட்சம் அரசு முழு மானியம் வழங்குகிறது. இந்த வீடு 365 சதுர அடி பரப்பளவில் பிரதான அறை, படுக்கை அறை, சமையல் அறை, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, சுகாதார வளாகம் மற்றும் தாழ்வார வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் இத்திட்டம் 2013-14, 2014-15 ஆண்டு வரை அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு 225 வீடுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 24 வீடுகள் முழுமை அடைந்துள்ளதாகவும், 201 வீடுகளுக்கு நிர்வாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.