இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அண்டை மாநிலமான கேரளத்தில் வாத்துக்கள் மூலம் பறவைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதை தொடர்ந்து, இம்மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகள், வாத்துக்கள், தீவன மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் இறைச்சிக் கூடம் ஆகியவைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கிறது. அதனால் இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களோ, கோழிப்பண்ணையாளர்களோ பறவைக்காய்ச்சல் குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. இதற்காக, 1 கால் நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழு என மொத்தம் 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஒவ்வொகு கோழிப்பண்ணை, வாத்துக்கள் உள்ள இடங்களுக்குச் சென்று இறப்பு ஏதாவது உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.