ஈரோடு அண்ணாஜீ வீதியில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி இயக்குநராக பணியாற்றி வருபவர் வேணுகோபால். நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் உள்பட 264 கூட்டுறவுச் சங்கங்களில் தணிக்கை செய்யும் பணி இங்குள்ள 64 தணிக்கையாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.கூட்டுறவுச்சங்கங்களில் தணிக்கை செய்யும் தணிக்கையாளர்கள் தங்களது கணக்கை, உதவி இயக்குநரிடம் ஒவ்வொரு மாதமும் கடைசிநாள் தாக்கல் செய்து ஒப்புதல் பெறுவது வழக்கம். இவ்வாறு தாக்கல் செய்யும்போது இந்த கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்க ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.