கடலூர் அருகே உள்ள களையூரைச்சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மகன் ஜெயச்சந்திரன் என்ற சந்துரு(26). இவர் பொறியியல் படிப்பு முடித்து புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.சபரிமலை போக மாலை அணிந்திருந்த அவர் குருசாமி வைத்திலிங்கம் தலைமையில் ஜெயச்சந்திரன் உள்பட 17 பேர் கடந்த 11-12-2010-ம் தேதி நள்ளிரவில் வேனில் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.மதுரை-தூத்துக்குடி சாலையில் திருச்செந்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, சபரிமலை பக்தர்கள் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் குருசாமி வைத்திலிங்கம், டிரைவர் தட்சணாமூர்த்தி, விரிவுரையாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.