விடுதியில் பள்ளி மாணவன் சாவு உறவினர்களின் சாலை மறியலால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு பள்ளி இயக்குநர் உள்பட மூவர் கைது
நாமக்கல் தனியார் பள்ளி மாணவன், பள்ளி விடுதியில் தூக்கிட்டு இறந்ததை அடுத்து அம்மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகே முக்கியச் சாலைகளை மறித்து 2 மணி நேரம் நடந்த இம்மறியலால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, பள்ளி இயக்குநர், விடுதி காப்பாளர், மற்றொரு மாணவன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.








