மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், காவல் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வருகிற 11,13,14,25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.இதை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்படவும் இருக்கிறது. இதில், சிவகாசி, விருதுநகர், சாத்தூர் வட்ட எல்லையில் நாள் முழுவதும் குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்யப்பட உள்ளதாகவும் குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.