அதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தலா ரூ.2569 மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகளையும், 15 பேருக்கு தலா 2890 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் தலா ரூ.3852 மதிப்பில் 10 பேருக்கு மோட்டார் பொறுத்திய தையல் இயந்திரமும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் சிறப்பு பள்ளிகளில் படித்து முறைசார் பள்ளிகளில் 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு பயில்வதற்கு தலா ரூ.6 வீதம் 52 பேருக்கு என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ.4.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வழங்கினார்.