தொடர்ந்து கலைவாணியின் தாய் ராஜேஸ்வரியின் சிறுநீரகத்தை பொறுத்த முடிவு செய்யப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அரசு காப்பீட்டு திட்டத்தின்கீழ் தென்னூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கலைவாணிக்கு கடந்த ஜூலை 22-ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த மறுநாள் ராஜேஸ்வரியின் சிறுநீரகம் பொருந்தவில்லை என்பதால் சிறுநீரகத்தை எடுத்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதுடன், விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம், 6 மாதங்களுக்குள் வேறு நல்ல கிட்னி கிடைத்தபிறகு அறுவை சிகிச்சை செய்து வைத்துவிடுவதாகவும் தெரிவித்தனராம். அதிர்ச்சியடைந்த கலைவாணி மற்றும் அவரது உறவினர்கள், இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி புகார் அளித்தனர். எனினும், இப்புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.