அதன்படி தங்கம், தந்தை பாண்டுரங்கனுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த ஜீவனாம்ச தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடவேண்டும் என பாண்டுரங்கன் கடலூர் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட வருவாய் அலுவலர், முதியவர் பாண்டுரங்கனுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.ஆனால், ஜீவனாம்ச தொகையை மகன் தர மறுத்ததால், தனக்கு ஜீவனாம்ச தொகை பெற்றதர வேண்டும் எனவும், அப்படி தராத பட்சத்தில் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்த எஸ்பி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.