இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கோ.மாதவன் கூறுகையில், டெல்டா அல்லாத பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக பயிர் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டெல்டா அல்லாத பகுதிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க முடியாது என்றும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் 3ல் ஒரு பங்காக குறைந்துள்ள நிலையில், வறட்சியின் நிலையை அறிந்துகொள்ள முடியம். இதனால் டெல்டா பகுதிகளில் விடுபட்ட விவசாயிகளுக்கும், டெல்டா அல்லாத பகுதிகளில் அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும் என்றார்.