பெண்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், அவர்களது மனச் சுமையை போக்கின்ற வகையிலும், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி வருவதால் பெண்கள் தங்களது இல்லங்களில் மன மகிழ்ச்சியுடன் குடும்பத்தினையும், குழந்தைகளையும் பேணிக்காக்க இத்திட்டம் இன்றியமையாததாகும்.தமிழக முதல்வர் பொதுமக்களின் நலன் கருதி, ஒரு புதுமையான மக்களை நாடி வருவாய்த் துறை என்ற அம்மா திட்டத்தினை அறிவித்தார். ஓவ்வொரு வாரம் செவ்வாய்கிழமையன்று இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்ததன் அடிப்படையில் தகுதி உள்ள நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் தலைமையில் செயல்படுகின்ற அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.