பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மதுரையில் நாட்டுவெடிகுண்டு வெடிப்பு: போலீஸார் தீவிர சோதனை

அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:04 pm

ஜெயப்பாண்டி

மதுரை, மே.1: மதுரை அண்ணாநகர் குப்தாமஹால் அருகே இன்று அதிகாலை வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்தனர். உடனடியாக அந்த இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இடையில், இந்த வெடிகுண்டு, சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்டிந்த நாட்டு வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது. வெடிச் சத்தம் கேட்ட இடத்தில் சில ஒயர் துண்டுகள் இருந்ததால், போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.