"நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம்
கிடைத்ததாகச் சொல்ல முடியும்'' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி.
ஆனால் மத்திய, மாநில போலீஸôர் பாதுகாப்பு அதிகம் நிறைந்த நாட்டின் தலைநகரான தில்லியில் இரவில் பெண்கள் தனியாக மட்டுமல்ல, துணையுடன்கூட செல்ல முடியாத பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது நண்பருடன் பஸ்ஸில் சென்ற கல்லூரி மாணவி ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இதை நிதர்சனமாக்கியுள்ளது.
பெண் முதல்வரைக் கொண்ட தில்லியில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது குறித்து பெண்ணிய ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகர் அந்தஸ்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா, வர்த்தகம், கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏராளமானோர் வந்து செல்லும் பெருநகராக தில்லி விளங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவம் தங்களின் அச்சத்தை அதிகரித்துள்ளதாக, பன்னாட்டு நிறுவனங்கள், வெளியூர்களில் இருந்து தில்லியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு தில்லி காவல் துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தில்லியில் 18 மணி நேரத்திற்கு ஒரு பாலியல் பலாத்கார சம்பவமும், 14 மணி நேரத்திற்கு ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதாகவும் நடைபெறுகிறது.
சில மாதங்களுக்கு முன், கேளிக்கை விடுதியில் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக, கால் சென்டரில் பணியாற்றிய பெண் இரவு நேரத்தில் பணி முடிந்து காரில் வீடு திரும்பிய சமயத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளானார். 2010-ம் ஆண்டில் மட்டும், தேசிய தலைநகர் வலயத்தில் 414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாயின.
அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் என்ற அளவில் மோசமான நிலை. நாட்டில் உள்ள 35 பெரிய நகரங்கள் எவற்றிலும் இந்த அளவுக்கு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லை.
தில்லியில் ஸ்பெயின், ருவாண்டா, நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

