தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

இது தெரியுமா? ரயில் தண்டவாளத்தில் கட்டைகளுக்குக் கீழே கற்கள் கொட்டுவது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்

Published On :23 ஜனவரி 2026, 6:53 pm IST

ரயில் தண்டவாளத்தில் கட்டைகளுக்குக் கீழே ஏன் கற்களைக் கொட்டி வைக்கிறார்கள்?

தண்டவாளங்களுக்கு இடையே உள்ள கற்களுக்கு ஆங்கிலத்தில் டிராக் பேலஸ்ட் (Track Ballast), தண்டவாளத்தில் இருக்கும் கட்டைகளுக்குப் பெயர் ஸ்லீப் (To Sleeper). இந்த ஸ்லீப்பர்கள் முற்காலத்தில் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்டன. தற்காலத்தில் கான்க்ரீட் பிளாக்குகளால் அமைந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இது நவீன கால முன்னேற்றம்.

சரி, கற்களை ஏன் கொட்டிவைக்க வேண்டும்.

இந்தக் கற்கள் எல்லாம் ஒரே அளவைக் கொண்டிருக்கும். இதற்கும் இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அளவு மாறினால் ஆபத்து. இந்தக் கற்கள் அவ்வளவு சீக்கிரம் காற்றாலோ வேறு விதமாகவோ இடம் மாறாதவை. அப்படியே அசையாமல் கிடக்கும். அந்த அளவுக்கு இறுக்கமாக அமைக்கப்பட்டிருக்கும்.

மழை பெய்தாலும் இவை இடம்மாறாமல் இருந்து தண்ட வாளத்துக்குப் பாதிப்பு வராமல், அந்தக் கட்டைகளை இப்படி அப்படி அசையாமல் பார்த்துக் கொள்ளும், மேலும் தண்டவாளத்துக்கு இடையே செடிகள் முளைத்து இடையூறு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும். தண்டவாளக் கட்டைகளை இறுக்கமாக வைத்திருக்கும் வேறுவிதமான பாதிப்புகள் வராமல் இருப்பதற்கும்தான் இந்தக் கற்கள்.

Summary

Why are stones laid beneath the wooden sleepers on the railway tracks?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.