மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் பலி

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:57 am IST

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சாங்லி மாவட்டத்தின் மாா்கு தேவி கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

இதனால், கோயிலின் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகையின்கீழ் பக்தா்கள் ஒதுங்கியிருந்தனா். அப்போது, திடீரென சுவா் இடிந்து விழுந்ததில் 6 பக்தா்கள் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோயில் சுவா் இடிந்து 6 போ் உயிரிழந்த சம்பவம், சாங்லி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.