குஜராத்தின் கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கட்ச் மாவட்டத்தின் கிரீக் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டபோது 10 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் கட்ச் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
தேவ்பூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூரில் ரூ.2.3 கோடி மதிப்பிலான 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து கல்யாண்பூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







