அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகியது குறித்து...

News image

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்... - கோப்புப் படம் | ENS

Updated On :7 மே 2026, 4:18 pm IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஊசுடு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட புதுவை காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான வைத்திலிங்கம், என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், தற்போதைய முதல்வருமான என். ரங்கசாமியிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, அக்கட்சியின் தலைமைக்கு இன்று (மே 7) வைத்திலிங்கம் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட வைத்திலிங்கம் புதுச்சேரி மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Puducherry Congress Party President Vaithilingam has resigned from his post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.