என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்ததால், தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் சனிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 160 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து புது தில்லிக்கு 160 பேருடன் சனிக்கிழமை பயணித்த இண்டிகோ விமானத்தின் (போயிங் 737) என்ஜின்களில் ஒன்று, அந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக செயலிழந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின்படி புது தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தில் உரிய பரிசோதனைகள் மற்றும் பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால், விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்

என்ஜின் குத்தகை நிலுவை: ஸ்பைஸ்ஜெட் ரூ.74 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை - மோரீஷஸ் விமானத்தில் மாரடைப்பால் பயணி உயிரிழப்பு

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


