மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கலால் வரி குறைப்பு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

News image

பெட்ரோல் - படம்: பிடிஐ

Updated On :27 மார்ச் 2026, 3:50 am

கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

இதன் காரணமாக நாளொன்றுக்கு 120 கப்பல்கள் 2.5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை அவ்வழியாக எடுத்துச் செல்லும் நிலையில், தற்போது நட்பு நாடுகளின் ஓரிரு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதித்து வருகிறது. இதனால், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத உச்சமாக ஒரு பீப்பாய் 119 டாலரைத் தொட்டு, தற்போது சற்று குறைந்து 100 டாலராக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ஐ முழுமையாக ரத்து செய்தும், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ. 13-ல் இருந்து ரூ. 3 ஆகவும் மத்திய நிதியமைச்சகம் இன்று குறைத்துள்ளது.

விலை குறையுமா?

கச்சா எண்ணெய் தொடர் ஏற்றத்தை அடுத்து, ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, தற்காலிக இழப்பை ஏற்றுக் கொண்டு கடந்த ஒரு மாதமாக விலை ஏற்றத்தை தவிர்த்து வருகின்றன.

இதனிடையே, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

தொடர்ந்து, மற்ற எண்ணெய் நிறுவனங்களும் விலையை ஏற்றும் என்று நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, எண்ணெய் நிறுவனங்களின் விலை ஏற்ற யோசனையைத் தவிர்க்க அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

Summary

Excise duty reduction! Will petrol and diesel prices decrease?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.