மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாடாளுமன்றம் இருக்கும்போது அறை விவாதம் ஏற்புடையதல்ல! அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த திரிணமூல் காங்.!

மேற்காசிய நிலவரம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் - திரிணமூல் காங்கிரஸ் புறக்கணிப்பு!

News image

அனைத்துக் கட்சிக் கூட்டம் - PTI

Updated On :25 மார்ச் 2026, 3:26 pm

மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை (மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் திரிணமூல் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.

முன்னதாக, மேற்காசிய போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.

மேற்காசிய நிலவரம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வளியுறுத்திக் கேட்டுக் கொண்ட நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட பிற எதிர்க்கட்சிகள், தங்கள் சார்பாக தலைவர்களை கூட்டத்துக்கு அனுப்பினர்.

இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறாமல் கருத்தரங்கம் பாணியில் அறை விவாதமாக நடைபெறுவதாக திரிணமூல் காங்கிரஸ் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இது குறித்து, அக்கட்சி தரப்பிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் சாகாரிகா கோஸ் பேசும்போது, “நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது, கருத்தரங்க அறை ஒன்றில் ஏன் நீங்கள் (மத்திய அரசு) கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்? நாடாளுமன்றத்தை ஏன் தவிர்க்கிறீர்கள்? நீங்கள் ஒரு செயலுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய இடம் ‘நாடாளுமன்றம்’. இது, நாடாளுமன்றத்தை தரம் குறைப்பதாக அமைந்துள்ளது” என்றார்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

Summary

Trinamool Congress on the all-party meeting to discuss West Asia situation - questioning why there is no discussion in Parliament when it is in session and holding a meeting in a conference room

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.