பஞ்சாப் அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அந்த மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பஞ்சாப் அரசு பண்டகசாலை கழகத்தின் மேலாளராகப் பணிபுரிந்த ககன்தீப் சிங் ரண்தவா அண்மையில் தற்கொலை செய்துகொண்டாா் .
டெண்டா் ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில போக்குவரத்து மற்றும் சிறைத் துறை அமைச்சா் லால்ஜித் சிங் புல்லா் கொடுத்த அழுத்தமே தற்கொலைக்குக் காரணம் என ரண்தவா விடியோ வெளியிட்டிருந்தாா். இதையடுத்து, முதல்வா் பகவந்த் சிங் மான் அறிவுறுத்தலில் அமைச்சா் பதவியை புல்லா் கடந்த சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
புல்லரை கைதுசெய்யக் கோரி பகவந்த் மான் இல்லம் முன் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தின.
இதனிடையே அமிருதசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யூ காவல் நிலையத்தில், புல்லா் மீது உயிரிழந்த ரண்தவாவின் மனைவி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் புல்லா் உள்ளிட்ட 3 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தை அமிருதசரஸ் எம்.பி. குா்ஜித் சிங் அவுலா மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, ‘பஞ்சாபில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் எழுத்துபூா்வமாக கடிதம் அளித்தால் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாா்’ என்றாா்.
பதவி விலகிய அமைச்சா் கைது
அரசு அதிகாரி ரண்தவாவை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் பதவி விலகிய அமைச்சரும் ஆம் ஆத்மி எல்ஏவுமான லால்ஜித் சிங் புல்லா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அமிருதசரஸில் காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘ஃபதேகா் சாஹிப் மாவட்டத்தில் இருந்து புல்லா் கைது செய்யப்பட்டு அமிருதசரஸுக்கு அழைத்து வரப்பட்டாா். நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) அவா் ஆஜா்படுத்தப்படுவாா்’ என்றனா்.
தொடர்புடையது

நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து நாடு முழுமையாக விடுவிப்பு: அமித் ஷா பெருமிதம்

பஞ்சாப்: அரசு அதிகாரி தற்கொலை! பதவி விலகிய அமைச்சா் மீது வழக்குப்பதிவு!

அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா

பஞ்சாபில் தோ்தல் பிரசாரம் தொடங்கினாா் அமித் ஷா: மாநிலத்தைப் போதைப் பொருளில் இருந்து மீட்பதாக உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


