புது தில்லி : மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர்? மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றிய விவரம் வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து இன்று(மார்ச் 23) வெளியிடப்பட்டது.
இது குறித்து, புது தில்லியில் இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருப்பதாவது :
“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பதுகாப்பாக உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல்களில் அங்கு காயமடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள இந்திய தூதரகம் இவ்விவகாரத்தை கண்காணித்து வருகிறது. அந்த நபரும் பாதுகாப்பாக இருக்கிறார்.
இந்தத் தாக்குதல்களில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்திருக்கிறார், ஒரு இந்தியரைக் காணவில்லை.
மேற்காசியாவில் நீடிக்கும் சண்டை குறித்து உலகத் தலைவர்கள் பலருடன் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அவர் ஈரான் அதிபருடன் பேசினார். அப்போது, அப்பிராந்தியத்தின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அவை உலக விநியோகச் சங்கிலியை சீர்குலைப்பதாகவும் குறிப்பிட்டார். பாதுகாப்பான கப்பல் வழித்தடத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தியர்களின் பாதுகாப்புக்கு ஈரானின் தொடர் ஆதரவையும் ஊக்குவித்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், ஈரான் மற்றும் இஸ்ரேலிலிருந்து திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு தேவைப்படும் உதவிகள் தொடர்ந்து செய்து கொடுக்கப்படும் என்றும் மேற்காசிய பிராந்திய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Iran Israel War Live Updates: Six Indians killed, one missing, one injured in conflict: MEA
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

வளைகுடா போர்! நாடு திரும்பிய 5,98,000 இந்தியர்கள் - மத்திய அரசு தகவல்!
மேற்காசியாவில் இருந்து இந்தியா திரும்பிய 2.60 லட்சம் பயணிகள்: வெளியுறவு அமைச்சகம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


