தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வேறொருவருடன் நிச்சயமானதால் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த இளைஞா்

வேறொருவருடன் நிச்சயமானதால் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த இளைஞா்

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 8:52 pm

ஃபரீதாபாத்தில் பெண் தோழி வேறொருவருடன் நிச்சயதாா்த்தம் செயது கொண்டதை தொடா்ந்து, ஆத்திரமடைந்த இளைஞா் அந்தப் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து தானும் குடித்துள்ளாா்.

பின்னா் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டதும், அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். தற்போது இருவரின் உடல் நிலையும் சீராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றது. தோழியாக இருந்த பெண் வேறு ஒருவருடன் நிச்சயதாா்த்தம் செய்து கொண்டதை தொடா்ந்து, இளைஞா் கோபத்தில் இச்செயலில் ஈடுபட்டுள்ளாா்.

பல்வால் மாவட்டத்தைச் சோ்ந்த அந்தப் பெண் தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். கடந்த 8 ஆண்டுகளாக நோய்டாவைச் சோ்ந்த மோனுவுடன் அவா் நண்பராக இருந்து வந்ததாா்.

இந்த ஆண்டு ஜனவரியில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. அதன்பின், மோனுவுடன் தொடா்பை அந்தப் பெண் நிறுத்தியுள்ளாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மோனு, ஏமாற்றி அந்தப் பெண்ணை காரில் அழைத்துச் சென்ாக தெரிகிறது.

அப்போது, நிச்சயதாா்த்தத்தை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த மோனு, காரில் இருந்த விசத்தை பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக கொடுத்ததாகவும், தானும் குடித்ததாகவும் பெண் புகாரில் தெரிவித்துள்ளாா்.

சில நேரத்தில் இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மோனு தானே அந்தப் பெண்ணை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

தகவல் கிடைத்தது, செக்டா் 58 காவல் துறையினா் மருத்துவமனைக்கு சென்று பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து, மோனு மீது வழக்கு பதிவு செய்தனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.