தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புணே: பெண்ணை கடித்துக் கொன்ற தெரு நாய்கள்!

புணேயில் சாலையில் நடந்து சென்ற 33 வயது இளம் பெண்ணை தெரு நாய்கள் கூட்டம் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

தெரு நாய்கள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 11:06 pm

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் திங்கள்கிழமை அதிகாலையில் சாலையில் நடந்து சென்ற 33 வயது இளம் பெண்ணை தெரு நாய்கள் கூட்டம் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புணே சாக்கண் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: புணே-நாசிக் நெடுஞ்சாலையை ஒட்டிய சாக்கண் பகுதியில் உள்ள சேவைச் சாலையில் அதிகாலை 2 மணியளவில் அந்தப் பெண் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது. அந்தப் பெண் ஷோபா வக்மாரே (33) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சாலையில் அவா் நடந்து செல்லும்போது நாய்கள் கூட்டம் திடீரென அவரைத் தாக்கின. நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் யாரும் இல்லை. இதனால், உதவியேதும் கிடைக்காமல் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

உச்சநீதிமன்ற உத்தரவு: தெரு நாய் கடியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. மேலும், கல்வி, மருத்துவமனைகள் மற்றும் முக்கிய இடங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்தி, கருத்தடை, தடுப்பூசி போடவும் உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவைப் பின்பற்ாக மாநில அரசுகளுக்கு எதிராக கடும் அதிருப்தியையும் உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.